×

 சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் ஊழியர்களுக்கு அடி: தப்பிச்செல்ல முயன்றவர் கைது

சென்னை: வேளச்சேரியைச் சேர்ந்தவர் அருண்குமார், இவர் தி.நகர், தணிகாசலம் சாலையில் உணவகத்தில் வேலை செய்து வருகிறார். 2 தினங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் மதிய உணவு சாப்பிட வந்தார். சாப்பிட்டதும் பணம் தராமல் செல்ல பார்த்ததை கண்ட அருண்குமார் மற்றும் மற்றொரு ஊழியர் சேதுராமன் அந்த நபரை நிறுத்தி பணம் கேட்டனர். ஆனால், அவரோ சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்காமல் தகராறு செய்து, அருகிலிருந்த இரும்பு கம்பியால் ஊழியர்கள் அருண்குமார் மற்றும் சேதுராமனை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது, ஓட்டல் ஊழியர்கள் சேர்ந்து அந்த நபரை பிடித்து மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில், சாப்பிட்டு விட்டு பணம் தராமல் ஊழியர்களை தாக்கியது, தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் (25) என்பதும், உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் தகராறு செய்து ஊழியர்களை தாக்கியதும் தெரியவந்தது. அதன்பேரில், மாம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மனோஜ்குமாரை கைது செய்தனர். மேலும், இவர் மீது ஏற்கனவே 2017ம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. …

The post  சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் ஊழியர்களுக்கு அடி: தப்பிச்செல்ல முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Arunkumar ,Velacheri ,Di. Nagar ,Thanigasalam Road ,
× RELATED பட்டம் விடும் போது தவறி விழுந்து...